சட்டவிரோத பணவரிவர்த்தனை.! அமலாக்கத்துறை முன் ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால்.!

கடந்த 2021 டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அதன் பிறகு இந்த மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.

அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணைக்காக டெல்லி சிறையில் அவர் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டெல்லி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.!

இதற்கிடையில் மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் அண்மையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதனை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

அந்த சம்மன் அடிப்படையில் இன்று (நவம்பர் 2) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜிரிவால் நேரில் ஆஜராக உள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதால் , அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.