தலைநகரில் இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!!கட்சிகள் தீவிரம்

  • டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
  • சூறாவளி பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம்  காட்டி வருகிறது.

தலைநகர் டெல்லியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை தேர்தல் வருகின்ற 8ந்தேதி  நடக்கிறது. இதில் அம்மாநிலத்தை ஆளும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு  இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

இதில் ஆம்ஆத்மி கட்சி தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் டெல்லியில் ஆட்சியை இம்முறையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று  முனைப்புடன் பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வருகிறது.

இந்நிலையில் அங்கு இன்று மாலையுடன்  தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha