வரதட்சணை கொடுமை இறப்புகள்.. வெளியான அதிர்ச்சி சர்வே.! எந்த மாநிலம் முதலிடத்தில்.?

வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல்.

2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற  மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் ராஜஸ்தானில் 2,244 பேர் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் குறிப்பாக  மிசோரம் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற இடங்களில் வரதட்சணை கொடுமை இறப்புகள் ஒன்று கூட பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment