கூட்ட நெரிசலில் உயிரிழப்பு 4ஆக உயர்வு.! விழா ஏற்பாட்டாளர் உடனடி கைது.!

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மார்க்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் நிறுவனமானது நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவசமாக வேஷ்டி சேலை வழங்குவதற்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்த வேஷ்டி, சேலை வழங்குவதற்கான டோக்கன் இன்று வழங்கப்பட்டது. அந்த டோக்கனை வாங்குவதற்கு அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் பலர் வயதானவர்களும் வந்துள்ளனர்.

டோக்கன் வழங்கும் போது ஏற்பட்ட கூட்டணி நெரிசலில் பலர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி முதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்து உள்ளது. மேலும், கூட்ட நெரிசலால் படுகாயம் அடைந்த 14 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர் ஐயப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment