முலாயம் சிங் மறைவு – இன்று நல்லடக்கம்..!

முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. 

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இவரது மறைவை அடுத்து 3 நாட்கள் உத்திரபிரதேச அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும், அரசு மரியாதையுடன்  முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment