” மீண்டும் கள்ளச்சாராய சாவு ” பெண்கள் உட்பட 22 பேர் பலி….அசாமில் அதிர்ச்சி…!!

  • சில வாரத்திற்கு முன்பு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்_டில் கள்ளச்சாரத்தை குடித்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பெண்கள் உட்பட 22 கள்ளச்சாரத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்
இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சில மணி நேரத்திலேயே உடல்நலம்
பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தகவல் அங்கே பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மருத்துவமனை சென்ற போது அங்கே 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 4 பெண்கள் உட்பட 22 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 பேரில் 11 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கள்ளச்சாரத்தை குடித்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment