அன்று 199, இன்று 185.. டீன் எல்கர் கனவை கலைத்த ஷர்துல் தாக்கூர்

டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்தும் இரட்டை சதத்தை நெருங்கி வந்து அதை அடிக்காமல் வெளியேறினால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் இன்று நாம் சொல்ல தேவையில்லை, ஒரு கிரிக்கெட் வீரருக்கு டெஸ்ட் போட்டியில் ஒரு முறை இது போன்ற ஏதாவது நடந்தால் பரவாயில்லை ஆனால்  இரண்டாவது முறையாக அது நடந்தால் அந்த வீரரின் மனவலியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அப்படி இருக்கையில், இன்று செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கருக்கும் இதேபோன்ற ஒன்று நடந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா வீரர் டீன் எல்கர் ஓபனிங் செய்தார். அவர்  2 நாட்களாக பேட்டிங் செய்து சதம் விளாசி சிறப்பாக விளையாடி  வந்ததால் அவர் இரட்டை சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது முடியவில்லை.

185 ரன்கள் எடுத்து விளையாடி வந்த  டீன் எல்கரை ஷர்துல் தாக்கூர் பெவிலியன் அனுப்பினார். களத்தை விட்டு டீன் எல்கர் வெளியேறும்போது இன்னும் 15 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட வருத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நடைபெற்று வருகிறது. இன்று 95-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அப்போது 5-வது பந்தில் எல்கர் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பந்து அவரது கையுறைகளைத் தொட்டு கீப்பரிடம் சென்றது. எல்கர் 287 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 185 ரன்கள் எடுத்தார்.

199 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்த எல்கர் :

எல்கருடன் இது இரண்டாவது முறையாக தனது இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் டெஸ்டில் கடந்த செப்டம்பர் 2017 இல், வங்காளதேசத்திற்கு எதிராக 199 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் எல்கர் தொடக்கத்தில் இருந்து 388 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார். அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர் அதிகபட்ச ரன்கள்  199 ஆகும்.

author avatar
murugan