மாமியாரின் விரல்களை கடித்த மருமகள்!!

டிவியின் சத்தத்தை குறைக்கும் சண்டையில் மாமியாரின் விரல்களை கடித்த மருமகள்.

தானேவில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளால் தனது வலது கையின் மூன்று விரல்களை கடித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இச்சம்பவம் திங்கட்கிழமை(செப் 5) இரவு நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது மாமியார் தனது மருமகளிடம் டிவியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதாகவும் மருமகள் அவர் மறுத்துவிட்டதால்,  கோபமடைந்த மாமியார் டிவியை அணைத்துள்ளார், அதையடுத்து  மாமியார் மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாமியாரின் விரல்களை மருமகள் கடித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இருவரும் சிறிய பிரச்சினைகளுக்காக எப்போதும் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் மருமகள் மீது சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment