ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை – உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

தமிழகத்தில் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. கோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம், ஆனால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்து, இதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment