ஆடல், பாடல் நிகழ்ச்சி..! தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு

ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்று உத்தரவு.

ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு கிராம மக்கள் சார்பாக அனுமதி கோரினால், தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது. ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்றும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்து, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்