அதிகரித்த வெளிநாட்டு நிறுவன முதலீடு…கடும் சரிவில் பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 61,560 புள்ளிகளாக நிறைவு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 371.83 புள்ளிகள் சரிந்து 61,560 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,181 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 2 நாட்களாக 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 61,932 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 371.83 புள்ளிகள் அல்லது 0.60% என சரிந்து 61,560 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 104.75 புள்ளிகள் அல்லது 0.57% சரிந்து 18,181 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,932 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,286 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர். இதனால் மும்பை பங்குச்சந்தை சரிவில் உள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி லிமிடெட், பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.