பெங்களுரூவில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் சேதம்.. ரூ.337 கோடி இழப்பு!

பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 397 கி.மீ சாலைகள் சேதமடைந்ததால் ₹337 கோடி இழப்பு.

பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 397 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட ரூ.337 கோடி மதிப்பிலான சேதத்தை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிபிஎம்பியின் படி, மூன்று கிலோமீட்டர் வரையிலான நடைபாதைகள் சேதமடைந்து ₹4 கோடி இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் போது 7,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 170 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் மகாதேவபுரா பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment