மழையால் பயிர்கள் சேதம் – ஆய்வை தொடங்கியது மத்திய குழு!

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய தொடங்கியது மத்திய குழு.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய தொடங்கியது மத்திய குழு. யூனிஸ், பிரபாகரன், போயா ஆகியோரை கொண்ட மத்திய குழு நாகை தலைஞாயிறில் ஆய்வை தொடங்கியுள்ளது. பயிர் சேதங்களை ஆய்வு செய்து குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய ஈரப்பதம் குறித்து அனுமதி அளிக்கும்.

நாகை தலைஞாயிறை தொடர்ந்து கட்சநகரம், வலிவலம், பட்டமங்கலம், சிராங்குடிபுலியூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவிடம் விசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment