9 வயது சிறுமிக்கு வலிப்பு..! மெஹந்தியால் நடந்த விபரீதம்..!

டெல்லியில் சிறுமியின் கையில் தடவப்பட்ட மெஹந்தியின் வாசனையால் வலிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

புதுடெல்லியில் சிறுமி ஒருவர் கையில் மெஹந்தி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் கையில் வைத்த மெஹந்தியின் (மருதாணி) வாசனையால் சிறுமி திடீரென சுயநினைவு இழந்து தரையில் விழுந்ததில் 20 வினாடிகளுக்கு சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலிப்பு ஏற்பட்ட சிறுமி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

9-yr-old girl gets seizures 1

மருத்துவமனை ஆய்வில் சிறுமியின் வலது கையில் மெஹந்தி பயன்படுத்தப்பட்டது. மெஹந்திக்கு மிகவும் தனித்துவமான மண் வாசனை உள்ளது. மெஹந்தி தடவிய கையை நோயாளியின் மார்பின் அருகே கொண்டு வந்தவுடன், அவளுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-yr-old girl gets seizures 2

சிறுமின் பெற்றோர்களிடம் மெஹந்தியின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்பொழுது சிறுமின் உடல்நிலை சீராக உள்ளதாவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment