#CuddleTherapy: கட்டிப்பிடி வைத்தியம் – ஒரு மணி நேரத்துக்கு ரூ.7000!

ஒரு மணிநேரம் ஒருவரை கட்டியணைத்து கொள்வதற்கு, சுமார் ரூ.7,000 வரை கட்டணம் வசூலிக்கும் ங்கிலாந்தை சேர்ந்த இளைஞர்.

மன அழுத்தம், கோபம் மற்றும் சோர்வாக இருப்பவர்களை, மற்றவர்கள் கட்டிப்பிடிப்பது மூலம் மன அழுத்தம் குறையும் என்பது தான் இந்தக் கட்டிப்பிடி வைத்தியத்தின் அடிப்படை. ஆனால் இந்த கட்டிப்பிடி வைத்தியம் உலகில் பல நாடுகளில் பரவி, தற்போது முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது. இந்தக் கட்டிப்புடி வைத்தியம் என்பது பல காலமாக இருப்பது தான். இருப்பினும், வசூல்ராஜா MBBS படத்திற்குப் பின்பு பல தெற்காசிய நாடுகளில் மசாஜ், ஸ்பா போலக் கட்டிப்புடி வைத்தியம் முக்கியமான சேவையாக மாறியுள்ளது.

இதைப் பல விமர்சனம் செய்தாலும், பலர் இதன் மூலம் அதிகளவிலான நன்மை அடைவதாகக் கூறுகின்றனர். இது சரியா, தவறா என்பதைத் தாண்டி, தற்போது இது ப்ரொபஷனல் சேவையாக மாறியிருப்பது வியக்க வைக்கிறது. தெற்காசியப் பகுதியிலும், அமெரிக்காவில் சில பகுதிகளில் மட்டுமே இருந்த professional cuddler சேவைகள் தற்போது பிரிட்டன் நாட்டின் முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது. அந்தவகையில், “Cuddle Therapy” எனப்படும் கட்டிப்புடி வைத்தியத்தை தனது முழுநேர தொழிலாக செய்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ட்ரெவர் ஹூடன். ஒரு மணிநேரம் ஒருவரை கட்டியணைத்து கொள்வதற்கு, சுமார் ரூ.7,000 வரை கட்டணம் வசூலித்து வருகிறார்.

விரக்தியடைந்த நிலையில், இருப்பவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு நேர்மறை உணர்வுகளை கொடுக்க முடியும் என கூறுகிறார் 30 வயதான ட்ரெவர் ஹூடன். ட்ரெவர் ஹூடன் தனது முயற்சியான எம்ப்ரஸ் கனெக்ஷனின் நிறுவனர் மற்றும் முழுநேர ஊழியர் ஆவார். ரோபாட்டிக்ஸ் துறையில் இளங்கலை பொறியாளர், தயாரிப்பு மற்றும் கிளையன்ட் மேலாளராக பல்வேறு தொழில்முறை வாழ்க்கையைக் கொண்ட ட்ரெவரின் ஒரே குறிக்கோள், மக்களின் வாழ்க்கையிலும் உறவுகளிலும் அதிக திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருவதன் மூலம் உலகை மாற்ற உதவுவதாகும்.

அவரது ‘கடில் தெரபி’ வணிகத்திற்காக ட்ரெவர் ‘Treasure’ என்ற பெயரால் செல்கிறார் மற்றும் பைனரி அல்லாதவர் என்று அடையாளம் காட்டுகிறார். அவரது வணிகம் தேடுபவர்களுக்கு ‘கனெக்ஷன் கோச்சிங்’ வழங்குகிறது. முதலில் கனடாவின் மாண்ட்ரியலைச் சேர்ந்த ட்ரெவர் இப்போது இங்கிலாந்தின் பிரிஸ்டலில் குடியேறினார். ஆரம்பத்தில் அவரது பணி சாதாரண மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். சிலர் இதை எல்லைக்குட்பட்ட பாலியல் வேலை என்றும் அழைக்கிறார்கள். முதலில் சிலருக்கு இது சற்று சங்கடமாக இருந்தாலும், விரைவில் அரவணைப்பு ஆறுதலாக இருக்கும் என்று கூறுகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment