உங்கள் சரும அழகை மெருகூட்டும் வெள்ளரிக்காய்!

இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும்.

பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. சிறிதுநேரம் வெள்ளரிக்காயை கண்களில் வைத்து இருந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் இல்லாமல் போவதோடு, முகம் பொலிவுடன் காணப்படும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி சில நிமிடத்துக்கு பிறகு கழுவினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விடும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்ல, முகத்திற்கு பொலிவை தரக்கூடியது. பளபளப்பான முகத்தைப் பெற, தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவினால் சருமம் முகம் பளபளப்பாவதோடு, நிரந்தரமான மாற்றங்களையும் பெற முடியும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.