#CSKvDC: 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை.. களத்தில் ரெய்னா!

ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 2 விக்கெட்டை இழந்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட் – டு பிளெசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 1.4 ஆம் ஓவரில் ஆவேஸ் கான் வீசிய பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டு பிளெசிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து 2.1 ஆம் ஓவரில் வோக்ஸ் வீசிய பந்தில் 5 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்தார். தற்பொழுது ரெய்னா-மொயின் அலி கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வருகின்றனர்.