CSK vs PBKS: அதிரடி காட்டிய கான்வே… அதிர வைத்த தோனி…இதுதான் பஞ்சாப் அணிக்கு இலக்கு..!!

ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs PBKS போட்டியில் சென்னை அணி முதலில் களமிறங்கி அதிரடியாக பேட் செய்து 200/4ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில்விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய துபே, அதிரடியாக விளையாடி சில சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இருந்தும் ஷிவம் துபே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில், தனது 5-வது அரைசதத்தை நிறைவு செய்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி 10 ரன்கள் மற்றும் ஜடேஜா 12 ரன்களில்  ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

கடைசியில் களமிறங்கிய தோனி(13*), 20 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 92* ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் நை வெற்றி பெற ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar