பாஜகவினரின் கருத்து! அண்ணாமலை விளக்கம் தரவேண்டும்; ஜெயக்குமார்.!

அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை தான் கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அதிமுகவுக்கு சரியான தலைமை தற்போது இல்லை எனவும், அதிமுக ஐந்தாக உடைந்துள்ளது எனவும் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக பொருளாளரின் கருத்துக்கு அண்ணாமலை பகிரங்கமாக விளக்கம் தரவேண்டும்.

மேலும் அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மம் இருப்பதால் அண்ணாமலை இதற்கு விளக்கம் தரவேண்டும், இனி இதுபோன்று பாஜக தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் வராது என்பதை அண்ணாமலை உறுதி செய்யவேண்டும், இல்லையென்றால் அண்ணாமலை ஒப்புதலில் தான் இவ்வாறு அவர் கருத்து தெரிவிக்கிறார் என கருதப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar