இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.
முதல் 5 ஓவர்கள் வரை இந்த கூட்டணி பொறுமையாக ஆடிவந்த நிலையில், 18 ரன்கள் அடித்து மயங்க் அகர்வாக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ராஜபக்க்ஷே களமிறங்க, தவானுடன் இணைத்து அதிரடியாக ஆடிவந்தார். இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. 42 ரன்கள் அடித்து ராஜபக்க்ஷே வெளியேறினார். அவரைதொடர்ந்து ஜானி லிவிங்ஸ்டன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 17 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் என மொத்தம் 88 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.