நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு காசிமேடு, கடலூர் மீன் கடையில் குவிந்த பொதுமக்கள்!

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காசிமேடு மற்றும் கடலூர் போன்ற அதிகம் மீன் விற்பனை செய்யும் இடத்தில குவிந்த பொதுமக்கள்.

கொ ரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஆறாவது கட்டமாக அடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்கள் அதிகம் வெளியில் நடமாட கூடிய நாளாகிய இந்த நாளில் அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நான்காவது வாரமாக நாளை இந்த முழு ஊரடங்கு இருப்பதால் காசிமேடு கடலூர் ஆகிய துறைமுகங்களில் வியாபாரிகள் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் செல்வதற்கு கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.

author avatar
Rebekal