எங்கே எங்கள் எய்ம்ஸ்.? செங்கல்களுடன் போராட்டத்தில் இறங்கிய சிபிஎம், திமுக உள்ளிட்ட கூட்டணி காட்சிகள்.!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அதில் சுற்று சுவர் கட்டும் பணிகளை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்காதது கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்கே எங்கள் எய்ம்ஸ் எனும்  போராட்டம் நடைபெறும் என மதுரை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் நேற்று அறிவித்து இருந்தார்.

அதே போல சிபிஎம் தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் கையில் ஒற்றை செங்கலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment