ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு பள்ளிகளில் பயிற்சி தர கூடாது.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்.!

நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது – இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன். 

சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் பேரணியில் ஈடுப்பட்டனர்

இதில் பங்கேற்ற, இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது’ என வலியுறுத்தினார்.

மேலும், ‘ இந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அரசு, தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பயிற்சி நடப்பதற்கு அனுமதி தர கூடாது’ எனவும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment