covid-19 வைரஸ் எதிரொலி..! 300 தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!

  • ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
  • ஈரானில் சிக்கியுள்ள 300 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது உலகையே மிரட்டி வரும் covid-19 வைரஸின் தாக்கத்தால் நேற்று வரை ஈரானில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு செல்லுமாறு படகுகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் போதிய விமானங்கள் இயங்காததால்  தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலுக்கும் இருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு  தனி விமானம் அனுப்பியது. இதே போல ஈரானில் உள்ள மீனவர்களை சிறப்பு விமானம் அல்லது கப்பல் மீட்டு வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்த இருந்தனர். இந்நிலையில் 300 தமிழக மீனவர்கள் மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.