கெபிராஜிக்கு ஜாமீன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு..!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  இதைத்தொடர்ந்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் மகளிர் போலீசார் கெபிராஜை கைது செய்தனர்.

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் புகாரை கேரளாவைச் சேர்ந்த பெண் கொடுத்துள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.

கெபிராஜ் சிபிசிஐடி வசம் உள்ள நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கெபிராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

author avatar
murugan