பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் – டிடிவி தினகரன்

கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். 

தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரும் நிவாரண உதவாய்க்காலி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், டிடிவி தினகரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து உதவி வருகிறீர்கள்.

தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.