சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி முடிவு…!

சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி முடிவு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை மேற்கொண்டது. அதனடிப்படையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம் அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  அதன்படி, 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில், குறைந்தபட்சம் 25,14,000 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.