டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும்  மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 340,047 பேர்  உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,728 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்து உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.