ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை.!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதம் 69 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்