கொரோனா வைரஸ்.! ஒரே நாளில் 43 பேர் பலி.! சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை .!

  • இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
  • சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த பாதிப்பால் தினமும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா வைரஸுக்கு  உலகம் முழுவதும் உள்ள பல ஆய்வகங்களில் தடுப்பு மருந்தினை உருவாக்க முயற்சி செய்து விஞ்ஞானிகள் வருகின்றனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சீனாவில் உள்ள உகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் , தொடர் கண்காணித்து வருவதாகவும் கூறினர்.

author avatar
murugan