சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்! பீதியில் மக்கள்!

சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் இதுவரை 12, 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.