மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது.!

மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 156 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57,692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 76,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம். மும்பை, புனே போன்ற முக்கிய நகரங்களை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து தற்போது 50 ஆயிரத்தை தண்டியுள்ளது.  மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்