தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..! மூதாட்டி ஒருவர் மரணம்..!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் கடந்த 15ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment