கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிவித்த நல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப்போகிறது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு.
கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும், பெற்றோரை இழந்த குழந்தை 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிவித்த நல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப்போகிறது..? திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.