இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 17,474,691 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,937,771 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை, 1,639,350 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35,786 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,059,093 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 783 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.