கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!

கொரோனா சிகிச்சை ஆராய்ச்சியில் அமெரிக்காவாழ் இந்திய சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்கான, மருந்து கண்டறியும் ஆராய்ச்சிக்காக, ‘2020 3எம் இளம்விஞ்ஞானி’ போட்டியில், அமெரிக்க வாழ் இந்தியரான அனிகா செப்ரோலு (14) என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனிகா, கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியை, அந்த போட்டியில் சமர்ப்பித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புக்காக 25 ஆயிரம் டாலர் பரிசினையும் வென்றுள்ளார். அவரது ஆராய்ச்சியில், கொரோனா வைரஸில் மேல்பகுதியில், முள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது புரோடீனால் ஆனது. நாம் சோப்பு போட்டு கை கழுவும் போது. வைரஸின் மேல் பகுதியில் உள்ள அந்த முள் போன்ற அமைப்பு சிதைந்து விடும். இந்த முள் மூலம் தான், வைரஸானது நமது உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் சென்ற பின் அது பெருகி, தொற்று நோயாக மாறுகிறது.

இந்நிலையில், புரோடீனுடன் பிணைந்து காணப்படும் இந்த முள் போன்ற மூலக்கூறை தான் இந்த மாணவி கண்டுபிடித்துள்ளார். அனிகா இந்த மூலக்கூறை கண்டறிய, பல கணினி நிரல்களை பயன்படுத்தி உள்ளார். மேலும் இதற்கான மருந்துக்கு எந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, சிலிகா மெதடாலஜி முறையை பயன்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அனிகா கூறுகையில், ‘போட்டியில் வென்றது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சியை நான் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். அனிகாவிற்கு மருத்துவராகவும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் வரவேண்டும் என்பது தான் அவரது லட்சியம் ஆகும்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

44 mins ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

50 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

51 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

1 hour ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

2 hours ago