கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக ஓரே நாளில் 9,386 பேருக்கு கொரோனா.!

கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 9,386 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 9 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 9,386 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,09,792 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 7,866 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,19,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,232 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.