கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் மேலும் 533 காவலர்களுக்கு கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் மேலும் 533 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா தொற்று கொண்ட மாநிலமாக மராட்டியம் தான் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவல்துறையினருக்கு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 533 காவலர்களுக்கு கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 17,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 14,269 காவலர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,573 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Rebekal