மனிதனை மட்டுமல்ல…, விலங்குகளையும் விடாது துரத்தும் கொரோனா…! வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்களுக்கு கொரோனா..!

வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும் கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல், கொரோனா நோய் தொற்று 2-ம் அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் பசியின்மை. சளி தொந்தரவு இருந்ததால் அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.