கொரோனா பரவல் : தனிமைப்படுத்திக் கொண்ட காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி..!

கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓமைக்ரான்  பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், எனது ஊழியர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நான் பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என சோதனை முடிவுகள் வந்தது. இருப்பினும் நான் தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.