கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என ஆர் பி உதயகுமார்.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று திருவொற்றியூரில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு நடத்தினார். அங்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அங்கு அவர் கூறுகையில், இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா பேரிடர் நிவாரண சிறப்பு நிதியாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.