கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா பாசிடிவ்.!

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேற்றுள்ளார் அதில்,  நான் அறிகுறி இல்லா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளேன். தற்போது வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன்.

இந்நிலையில் என்னை தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.