கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மதுரை தனியார் மருவமனைக்கு சென்ற நேரு என்பவரிடம் ரூ.8 லட்சம் வசூல்.

மதுரையில் கொரோனா சிகிச்சைக்காக முன்பணமாக பெற்ற ரூ.8 லட்சத்தை திருப்பி தரகோருவது பற்றி பதில்தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், மதுரை ஆட்சியர், மருத்துவர் ராஜ்குமார் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, அறிகுறி இருப்பதாக கூறி, மதுரை தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை முன்பணமாக ரூ.8 லட்சம் பெற்றுள்ளது.

இதையடுத்து, பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் மனுதாரரான நேரு, அவரது மனைவி வீடு திரும்பியுள்ளனர். பின்னர் 2 நாள் சிகிச்சைக்கான செலவு போக மீதப்பணத்தை திருப்பி கேட்டபோது மருத்துவமனை தர மறுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரூ.1.05 லட்சத்தை திருப்பி தந்த நிலையில், ரூ.65.840 க்கு மட்டுமே மருத்துவமனை ரசீது தந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube