சேலம் மருத்துமனையில் அசைவ உணவு கேட்ட கொரோனா நோயாளிகள்! மறுப்பு தெரிவித்த மருத்துவர்கள்!

சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் வெளிமாநில தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் சிலர் மருத்துவர்களிடம் அசைவ உணவு கேட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் வெளிமாநில தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் சிலர் மருத்துவர்களிடம் அசைவ உணவு கேட்டுள்ளனர். மருத்துவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சில நோயாளிகள் ஆன்லைன் மூலம் பிரியாணி, தந்தூரி  ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளனர்.  

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.