100 % கொரோனாவை தடுக்கும் ஆன்டிபாடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.!

கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கலிபோர்னியாவை சேர்ந்த சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொடூர வைரஸாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இதனால், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிய பலவேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவை 100 சதவீதம் தடுக்கும் மருந்தை கண்டறிந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துள்ளது. இந்த ஆன்டிபாடி செலுத்தப்பட்ட மனித உயிரணுக்களில் கொரோனா நுழைவது முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த STI-1499 எனும் ஆன்டிபாடி ஒரு மாதத்திற்கு 2 லட்சம் டோஸேஜ் உருவாக்க இயலுமாம். விரைவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.