இந்தியாவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – உயிரிழப்பு எவ்வளவு?

இந்தியாவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 56,000 பேர் புதிதாக கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,705,158 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்116,653 பேர் உயிரிழந்துள்ளனர். 6,871,895 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 716,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
author avatar
Rebekal