காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டியிருந்தது. நேற்று மாலை சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற அறிகுறிகள் ஏற்பட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சோனியா காந்தி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கே.சி.வேணுகோபால் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment