கேரளாவில் இன்று 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரள மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில், கேரளாவில் இன்று 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,95,132 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 7,836 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,99,634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா பாதிப்பால் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,025 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 94,388 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.