சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

சென்னையில் இருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சென்னையில் இருந்து வருவோரால், புதுச்சேரியில் கொரோனா அதிகரிப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும், தொற்று உள்ளோரிடம் இருந்து பரவுவதால் புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து வருவோருக்கு புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.