தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்.! சிறப்பு பார்வை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக்கிக்கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 571 -ஆக உயர்ந்துள்ளது. 

இதில் ஊரடங்கிற்கு முன்னதாக ஒற்றை இலக்கங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு இரட்டை இலக்கம், மூன்று இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மார்ச் மாத இறுதி வரை 124-ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏப்ரல் 5  தேதிகளிலேயே 447 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகி தற்போது எண்ணிக்கை 571-ஆக உள்ளது. 

இதில் சென்னை மாநகரம் 100-ஐ நெருங்குகிறது. 95 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கோவை உள்ளது. இம்மாவட்டத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நெல்லையில் 38 பேர், ஈரோடுயில் 32 பேர், நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா 23 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், மதுரையில் 19 பெரும், விழுப்புரத்தில் 15 பேரும், திருப்பூர், சேலம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேரும், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேரும், திருப்பத்தூர் மற்றும் கடலூரில் தலா 10 பேரும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும், கன்னியாகுமரி 6 பேருக்கும், சிவகங்கை, வேலூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேரும், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி தலா 4 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 2 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் 31 மாவட்டங்களில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.